Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தென் தாய்லாந்து பாதுகாப்பாக உள்ளது
தற்போதைய செய்திகள்

தென் தாய்லாந்து பாதுகாப்பாக உள்ளது

Share:

தாய்லாந்து, ஏப்ரல் 29-

தென் தாய்லாந்திலுள்ள சில பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதால் மலேசியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகைப் புரியலாம் என சொங்க்லா-விலுள்ள மலேசிய தூதரர் அஹ்மத் ஃபஹ்மி அஹ்மத் சர்காவி தெரிவித்தார்.

பெரும்பாலான குண்டு வெடிப்புகள் புறநகர் பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. மாறாக, மக்கள் அதிகமாக திரளுகின்ற இடங்கள் அல்ல என அவர் தெளிவுபடுத்தினார்.

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில், அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. போலீஸ் உள்ளிட்ட அந்நாட்டு அமலாக்க தரப்புகளுக்கும் கலகக்காரர்களுக்கும் இடையில் அந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஆகையால், தாய்லாந்திற்கு வருவதற்கு அஞ்சவேண்டியதில்லை என்றாலும், எதிர்பாராத சம்பவங்களைத் தவிர்க்க, மலேசியர்கள் அவ்வப்போது கவனமாக இருக்க வேண்டுமென அஹ்மத் ஃபஹ்மி கேட்டுக்கொண்டார்.

அண்மையில் வெளியிடப்பட்ட தரவின்படி, கடந்தாண்டு சுமார் 4.56 மில்லியன் மலேசியர்கள் தாய்லாந்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News