Jul 27, 2026
Thisaigal NewsYouTube
‘மாட் ரெம்பிட்’ சண்டையை குறித்து போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

‘மாட் ரெம்பிட்’ சண்டையை குறித்து போலீசார் விசாரணை

Share:

சிலாங்கூர், புக்கிட் அம்பாங் -கில் “மாட் ரெம்பிட்” குழுவில் நிகழ்ந்த சண்டையை குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சண்டையைக் குறித்து எந்தவொரு புகாரும் கிடைக்க பெறவில்லை என்ற போதிலும் சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்று வைரலாக பரவி வருவதை தொடர்ந்து இவ்விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் உமர் கான் கூறினார்.

ஆயுதங்களை கொண்டு கலவரம் செய்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று ஹுசைன் உமர் விளக்கினார்.

கடந்த மார்ச் 12 ஆம் தேதி மோட்டார் சைக்கிளோட்டி குழு ஒன்று சண்டையிடுவதும், அச்சண்டையில் ஒருவர் மற்றொருவரை குத்தி அந்நபர் தரையில் விழுந்ததாகவும், மேலும் ஐந்துக்கு மேற்பட்டோர் அவரை உதைத்து தலை கவசத்தால் தாக்கியதாகவும் காணொளியில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்