Jul 6, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் ஜாலிலில் கைகலப்பில் ஈடுபட்ட ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

புக்கிட் ஜாலிலில் கைகலப்பில் ஈடுபட்ட ஐவர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூன்.11-

நேற்றிரவு கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் உள்ளூரைச் சேர்ந்த ஐந்து ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மலேசியாவிற்கும், வியட்நாமிற்கும் இடையிலான 2027ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது, அரங்கிற்கு வெளியே இந்த கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்பில் இரவு 11.50 மணியளவில் செராஸ் மாவட்ட போலீசார், 19 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரையும் கைது செய்தனர்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த ஐவரும், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு ஒரு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரிட்ஸுவான் காலிட் தெரிவித்தார்.

Related News