Jan 20, 2026
Thisaigal NewsYouTube
துரோகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடரும்
தற்போதைய செய்திகள்

துரோகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடரும்

Share:

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிட்டு, வெற்றிப் பெற்றப்பின்னர் கட்சிவிட்டு கட்சித் தாவிய சில துரோகிகளுக்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் தந்த அபரிமித ஆதரவினால் 60 ஆண்டு கால பாரிசான் நேஷனல் ஆட்சிக்கு பக்காத்தான் ஹராப்பான் முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
ஆனால், துரோகிகளின் நயவஞ்சகத்தினால் எம்.பி.க்கள் பலர் கட்சிவிட்டு கட்சி மாறியதால் இரண்டு ஆண்டுகளிலேயே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்தாக ஃபாமி ஃபட்ஸில் சுட்டிக்காட்டினார்.

துரோகம் செய்த பிகேஆர் முன்னாள் எம்.பி.க்களுக்கு எதிராக கட்சித் தலைமையகம் தொடுத்து வரும் இழப்பீடு கோரும் வழக்கில் இன்று முதல் வெற்றி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
PKR கட்சியின் முன்னாள் உதவித் தலைரும், அம்பாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜுரைடா கமருடீன் கட்சி விட்டு கட்சித் தாவியதற்காக இழப்பீட்டுத் தொகையாக ஒரு கோடி வெள்ளியை பிகேஆர் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது தொடர்பில் ஃபாமி ஃபட்ஸில் எதிர்வினையாற்றினார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு