Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

Share:

ஜோகூர் பாரு தாமான் மாஜு ஜெயா-விலுள்ள தங்கும் விடுதி ஒன்றில், வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 19 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில், ஜோகூர் பாருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் துணை தலைவர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்துள்ளார்.

அந்நபரிடமிருந்து, பளுப்பு நிற டிஷர்ட், நீல நிற ஜீன்ஸ், கறுப்பு தொப்பி மற்றும் இரண்டு கைப்பேசிகள் உள்ளிட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குற்றப் பின்னணி எதுவும் இல்லாத அந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் பரிசோதனையில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட 39 வயதான வெளிநாட்டைச் சேர்ந்த அப்பெண், உடம்பில் 12 இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன் தங்கும்விடுதியின் அறை ஒன்றில் நேற்று பிணமாகக் கண்டறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!