Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!
தற்போதைய செய்திகள்

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

Share:

கோலாலம்பூர்: இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தையைக் காப்பாற்ற தண்டுவட அணுக்களைத் தானம் செய்த மலேசியச் சிறுவனின் முயற்சி சோகத்தில் முடிந்துள்ளது.

லுகேமியா நோயுடன் போராடி வந்த தனது தந்தைக்குத் தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், அச்சிறுவன் தானாக முன்வந்து அணுக்களை வழங்கினான். இந்தச் சிறு வயதில் அறுவை சிகிச்சை மற்றும் ஊசிகளுக்கு அஞ்சாமல் தந்தைக்காக அவன் செய்த தியாகம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில், எதிர்பாராத உடல்நலச் சிக்கல்கள் ஏற்பட்டதால் தந்தை காலமானார். தந்தையை மீட்கப் போராடிய சிறுவனின் இந்தத் துணிச்சலான முயற்சி தோல்வியில் முடிந்தாலும், அவனது அன்பும் தியாகமும் இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Related News