Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

Share:

மலாக்கா மாநிலம், சுங்கை ஊடாங் பகுதியில் 25 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், இன்று முதல் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளார்.

நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில், உயிரிழந்த இளைஞரின் வீட்டின் முன்பு, 44 வயதுடைய சந்தேக நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகின்றது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேக நபர் அந்த இளைஞரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர், தனது கைப்பேசியை அந்த இளைஞரிடம் கொடுத்திருந்ததாகவும், பலமுறை கேட்டும், அந்த இளைஞர் அதனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த கைப்பேசியை போதைப்பொருள் வாங்குவதற்காக அந்த இளைஞர் விற்றுவிட்டதாக சந்தேக நபர் நம்பியதையடுத்து, ஆத்திரமடைந்த அவர் இத்தாக்குதலை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!