ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவிலுள்ள உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்வி பெர்காத் துவா கப்பலில் சிக்கியிருந்த நான்கு மலேசிய பணியாளர்களும் இன்று பாதுகாப்பாக மலேசியா திரும்பினர்.
இன்று காலை 9 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
துபாயில் உள்ள மலேசிய துணைத் தூதரகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், ஒருங்கிணைந்து மேற்கொண்ட இந்த முயற்சியில், அவர்கள் கடந்த ஜூலை 18-ஆம் தேதி கப்பலிலிருந்து கரையேற அனுமதிக்கப்பட்டனர்.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக எம்வி பெர்காத் துவா கப்பலானது ஹம்ரியா துறைமுகத்தில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.








