நிலத் தகராறால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த பகாங், மாரான், கம்புங் சுங்கை கோட் பகுதியைச் சேர்ந்த ஒராங் அசுலி மக்கள், தனது சொந்த நிலத்தில் வந்து தங்கிக் கொள்ளலாம் எனப் பகாங் மாநிலத்தின் துங்கு அம்புவான்-ஆன துங்கு அம்புவான் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா அழைப்பு விடுத்துள்ளார்.
கம்புங் சுங்கை கோட் பகுதியில் நிலத் தகராறு காரணமாக வீடுகளை இழந்த ஒராங் அசுலி மக்களின் துயரத்தைக் கண்டு மனம் வருந்திய அவர், கோலா வாவ்வில் உள்ள தனது சொந்த நிலத்தில் குடும்பங்களுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகப் பகாங் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர் ஹாரி யஹ்யா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட ஒராங் அசுலி மக்களின் நலன் காக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் ஓரங்கட்டப்பட மாட்டார்கள் என்றும் துங்கு அம்புவான் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








