May 22, 2026
Thisaigal NewsYouTube
சிந்தனைக் குழாமின் தலைவராக Nurul Izzah Anwar நியமனம்
தற்போதைய செய்திகள்

சிந்தனைக் குழாமின் தலைவராக Nurul Izzah Anwar நியமனம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 -

சமூகவியல், பொருளாதார ஆராய்ச்சி சிந்தனைக்குழாமின் புதிய தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும்,முன்னாள் பெர்மாத்தாங் பாவு எம்.பி.யுமான னூருல் இசாசா அன்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிந்தனைக் குழாமின் புதிய தலைவாக னூருல் இசாசா அன்வார், நியமிக்கப்பட்டு இருப்பது மூலம் சமூகவியல், பொருளாதார துறைகளில் அவர் கொண்டுள்ள அனுபவம், நல்லதொரு வளர்ச்சியை கொண்டு வருவார் என்று செரி என்று சுருங்க அழைக்கப்படும் சமூகவியல், பொருளாதார ஆராய்ச்சி சிந்தனைக்குழாம், ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

னூருல் இசாசா , தனது வாழ்க்கை முழுவதும் பெண்களின் ஆளுமை மற்றும் பாலின சமத்துத்திற்காக போராடி வந்தவர். சமூக நீதிப் பிரச்னைகளை கையாளுதில் அவர் கொண்டுள்ள நிபுணத்துவம் அந்த அமைப்பை மேலும் ஆக்ககரமான வழிகளில் முன்னெடுப்பதில் பெரிதும் உதவும் என்று செரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News