Mar 19, 2026
Thisaigal NewsYouTube
குடும்பமாது கஸ்தூரி சுப்பிரமணியம் காணவில்லை
தற்போதைய செய்திகள்

குடும்பமாது கஸ்தூரி சுப்பிரமணியம் காணவில்லை

Share:

ஜோகூர், மார்ச் 26 -

ஜோகூர், கூலாயிலிருந்து பகாங், பெந்தோங்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற தனது மனைவி கஸ்தூரி சுப்பிரமணியம், கடந்த மூன்று நாட்களாக காணாதது குறித்து கணவர் சி. முத்துக்குமார், செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

41 வயது கஸ்தூரியின் பாதுகாப்பு குறித்து கவலையுற்றுள்ள கணவர் முத்துக் குமாரும்,அவரின் மூன்று பிள்ளைகளும், குடும்பமாது கஸ்தூரியை பார்த்தவர்கள் தங்களிடமோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ தகவல் அளிக்குமாறு பொது மக்களின் உதவியை நாடியுள்ளளர்.

ஜோகூர், கூலாய், பண்டார் புத்ரா, லோரோங் பங்காவு- வை சேர்ந்த கஸ்தூரி கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணியளவில் பெந்தோங்கில் உள்ள தமது தாயார் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

கணவர் முத்துக்குமாரும் , பிள்ளைகளும் கஸ்தூரியை கூலாயிலிருந்து கோலாலம்பூர், தி.பி.எஸ் பேருந்து நிலையத்திறகு செல்வதற்கு பேருந்தில் வழியனுப்பி வைத்துள்ளனர். கோலாலம்பூர் தி.பி.எஸ் பேருந்து நிலையத்தை மாலை 5.35 மணியளவில் வந்தடைந்த கஸ்தூரி, பெந்தோங்கிற்கு செல்ல கோலாலம்பூர் பெக்கெலிலிங் பேருந்து நிலையத்திற்கு செல்வதாகவும், தனது கைப்பேசி பெட்டரி குறைவாக இருப்பதாகவும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்..

அதன் பின்னர் குடும்பத்தினர், கஸ்தூரியுடன் தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்தும், தொடர்பு கிடைக்காததால், அவரின் பாதுகாப்பு குறித்து கவலையுற்ற கணவரும், பிள்ளைகளும் இரவோடு இரவாக கூலாயிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 2 மணியளவில் கோலாலம்பூர் பெக்கெலிலிங் பேருந்து நிலையத்தை வந்தடைந்து கஸ்தூரியை தேடியிருக்கின்றனர்.

பெந்தோங்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றடையாத நிலையில் , கஸ்தூரிக்கு ஏதாவது நேர்ந்து இருக்குமா? என்ற அச்சத்தில் கணவர் முத்துகுமார் , அதிகாலை 5 மணியளவில் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக கஸ்தூரியை காணாதது குறித்து மிகுந்த வேதனையில் உள்ள குடும்பத்தினர். அந்த குடும்பமாதுவை பார்த்தவர்கள் 011-7034 8353 என்ற தொலைபேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்பட்டள்ளனர்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை