Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கையில் துப்பாக்கியுடன் இருக்கும் நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

கையில் துப்பாக்கியுடன் இருக்கும் நபர் தேடப்படுகிறார்

Share:

பாங்கி, மார்ச் 22.

பண்டார் துன் ஹஸ்ஸின் ஒண்- னில் முதியவர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் கார் உரிமையாளரை துரத்தும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 60 வயதுடைய அப்பெரியவருக்கும் 34 வயது காரின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கடனை திருப்பி செலுத்துவதில் தாமதமாக்கியதாக நம்பப்படும் அப்பெரியவரின் மகளின் வாகனத்தை மீட்டெடுக்க சென்ற அக்காரின் உரிமையாளரிடம் அவர் அத்தகைய சம்பவத்தை புரிந்திருப்பதாக கூறப்படுகின்றது.

கார் கடனில் இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாத பட்சத்தில் அக்காரை எடுத்து செல்ல முடியாது என்று அப்பெரியவர் வாக்குவாதம் செய்ததுடன் துப்பாக்கியுடன் துரத்தியதாகவும் அக்காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்திருப்பதாக காஜாங், மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் மோஹட் சயிட் ஹாசன் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மோஹட் சயிட் ஹாசன் விவரித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை