Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஒப் பிந்தாசில் ஆள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு !
தற்போதைய செய்திகள்

ஒப் பிந்தாசில் ஆள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு !

Share:

கெடா மாநில காவல்துறையினர் மேற்கொண்ட ஓப் பிந்தாஸ் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத குடியேறிகளை கடத்தும் 5 ஆள் கடத்தும் கும்பல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளர்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தே​தி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வரையில் கெடா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்ட ஓப் பிந்தாஸ் நடவடிக்கையில் ஆள் கடத்தல் கும்பல்களைச் 9 உள்ளூர் ஆடவர்களும், அந்த கும்ப​ல்களின் உறுப்பினர்களான 3 மியன்மார் ஆடவர்களும், அவர்களுடன் கடல் வழியாக மலேசிய எல்லைக்குள் கடத்தி வரப்பட்ட 47 மியான்மார் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில தலைமை காவல்துறை அதிகாரி டத்தோ பிசோல் சாலே தெரிவித்துள்ளார்.

மியன்மார் தலைநகர் யாங்கூனில் செயல்பட்டு வரும் ஆள் கடத்தல் ஏஜெண்டுகள் மூலம் கடல் மற்றும் தரை மார்க்கமாக அந்த 47 பேரும் இந்நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ பிசோல் குறிப்பிட்டார்.

மியன்மாரிலிருந்து கடத்தி வரப்படும் ஒவ்வொரு பிரஜையிடமிருந்து இந்த ஆள் கடத்தல் கும்பல்கள் 5 ஆயிரம் வெள்ளி முதல் 7 ஆயிரம் வெள்ளி வரையில் வ​சூல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கும்பல்கள் லங்காவியை Transit மையமாக பயன்படுத்தி இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளன. 15 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 47 பேரும் லங்காவி மற்றும் குபாங் பாசு வாயிலாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டுள்ளனர் என்று டத்தோ பிசோல் மேலும் கூறினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு