Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கார் மரத்தில் மோதி ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கார் மரத்தில் மோதி ஆடவர் பலி

Share:

கோத்தா திங்கி, செப்டம்பர்.06-

ஆடவர் ஒருவர் பயணித்த கார் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள மரத்தில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று பிற்பகல் 3.35 மணியளவில் கோத்தா திங்கி, ஜாலான் பண்டார் பெனவார் புங்கை என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 19 வயதுடைய எஸ். சத்தீஷ்வரன் என்ற இளைஞர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.

சத்திஷ்வரன் பயணித்த புரோட்டோன் வீரா காரின் இடிபாடுகளிலிருந்து அவரின் உடலை மீட்க தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி நாடப்பட்டதாக யுசோஃப் ஒத்மான் குறிப்பிட்டார்.

சவப் பரிசோதனைக்காக அந்த இளைஞரின் உடல், கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி