Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கார் மரத்தில் மோதி ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கார் மரத்தில் மோதி ஆடவர் பலி

Share:

கோத்தா திங்கி, செப்டம்பர்.06-

ஆடவர் ஒருவர் பயணித்த கார் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள மரத்தில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று பிற்பகல் 3.35 மணியளவில் கோத்தா திங்கி, ஜாலான் பண்டார் பெனவார் புங்கை என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 19 வயதுடைய எஸ். சத்தீஷ்வரன் என்ற இளைஞர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.

சத்திஷ்வரன் பயணித்த புரோட்டோன் வீரா காரின் இடிபாடுகளிலிருந்து அவரின் உடலை மீட்க தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி நாடப்பட்டதாக யுசோஃப் ஒத்மான் குறிப்பிட்டார்.

சவப் பரிசோதனைக்காக அந்த இளைஞரின் உடல், கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

Related News