கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பில் 90 விழுக்கட்டிற்கும் அதிகமானோர் வாக்களித்து இருப்பது நல்லதொரு அறிகுறியாகும் என்று சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணி வரையில் 96 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் உள்ள வாக்காளர்கள் நல்லதொரு அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது என்று அஸ்மின் அலி குறிப்பிட்டார்.
இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் பாங் சாக் தாவோ, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கைருல் அஸ்ஹரி சௌத் உட்பட நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.








