பெட்டாலிங் ஜெயா, மே 03-
பிரச்னைகளுக்கு உரிய பொதுச்சேவை ஊழியர்களுக்கு, 13 விழுக்காட்டு சம்பள உயர்வு வழங்கப்படாது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்வைத்துள்ள பரிந்துரையை, பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கமான- CUEPACS வரவேற்றுள்ளது.
நெறிமிக்கவர்கள் மட்டுமே, பொதுச்சேவை துறையில் பணியாற்றப்படுவதை உறுதிபடுத்த, அந்நடவடிக்கை அவசியமாவதாக, அதன் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் முகமது நோர்டின் தெரிவித்தார்.
சிக்கலுக்குரிய ஊழியர்கள் விவகாரத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், அரசாங்கத்தின் அடைவுநிலைக்கு அது பாதிப்பையே ஏற்படுத்தும். 1.6 மில்லியன் பொதுச்சேவை ஊழியர்களைக் கொண்ட பொதுச்சேவை துறையில், அவ்வகை ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது 100 முதல் 200 பேராகத்தான் இருக்கும்.
எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கட்டொழுங்கு பிரச்னைகளை உடைய அத்தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் எனவும் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார்.








