Jul 28, 2026
Thisaigal NewsYouTube
120 விலைமாதர்கள், உபசரணைப்பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

120 விலைமாதர்கள், உபசரணைப்பெண்கள் கைது

Share:

குவாந்தான், மார்ச் 9 -

உபசரணைப்பெண்கள் என்ற போர்வையில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் விலைமாதர்கள் உட்பட 120 கைது செய்யப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பகாங், குவந்தானில் 17 கேளிக்கை மையங்களில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு பயணப்பத்திரத்தையும் கொண்டிருக்காத அந்த வெளிநாட்டுப் பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் விலைமாதர்களாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குநர் ஜாப்ரி இம்போக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 103 பெண்கள், தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். இருவர் லாவோஸ், மேலும் 11 பேர் வியட்நாம் அறுவர் இந்தோனேசியா, மியன்மாரை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

19 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்களிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லை என்று ஜாப்ரி இம்போக் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்