Jul 27, 2026
Thisaigal NewsYouTube
SPRM விசாரணை வளையத்திற்குள் துன் மகாதீர் தலைமை அணையர் அஸாம் பாக்கி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

SPRM விசாரணை வளையத்திற்குள் துன் மகாதீர் தலைமை அணையர் அஸாம் பாக்கி அறிவிப்பு

Share:

குவா முசாங், ஏப்ரல் 25-

சொத்து விவரங்கள் அறிவிப்பது தொடர்பில் முன்னாள் பிரதமரான துன் முகாதீர் முகமது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

SPRM விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட பத்து தனி நபர்களில் துன் மகாதீரும் ஒருவர் ஆவார் என்று SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரி வித்துள்ளார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 2003 ஆ ம் ஆண்டு வரையில் 22 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இருந்த துன் மகாதீரின் சொத்து விவரங்களை அறிவிப்பது தொடர்பாக அவர் தற்போது SPRM விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

ஏற்கனவே துன் மகாதீரின் இரு புதல்வர்களான மிர்சான் மகாதீர் மற்றும் மொக்ஸானி மகாதீர் ஆகியோர் SPRM விசாரணைக்குள் இருந்து வரும் வேளையில் தற்போது துன் மகாதீரும் SPRM விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சொத்து விவரங்களை அறிவிப்பதில் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு விண்ணப்பம் செய்து வரும் துன் மகாதீரின் இரு புதல்வர்களும் 2009ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் 36 ஆவது விதியின் கீழ் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக அறிவித்தாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கிானர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்