May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது
தற்போதைய செய்திகள்

ஆடவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 13-

ஜோகூர் பாரு, சுங்கை டாங்கா பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த ஆடவர் ஒருவரை தேடும் பணியை தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் போலீசார் முழு வீச்சில் தொடங்கியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் ஆடவர் ஒருவர், சுங்கை டாங்கா பாலத்திலிருந்து ஆற்றில் குதித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த தேடுதல் பணி கடந்த இரண்டு நாட்களாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த சிறிது நேரத்திலேயே ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 போலீஸ்காரர்கள், லார்கின் தீயணைப்பு,மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்கள், அந்த ஆடவரை தேடும் பணியில் ஈடுபட்டதாக பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் ஆற்றில் குதித்த பகுதியிலிருந்து கம்போங் சுங்கை மெலாயு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அளவில் தேடுதல் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பல்வீர் சிங் மேலும் கூறினார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி