இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி விலை உயர்வு கண்டிருப்பதைத் தொடர்ந்து உள்ளூர் விளைச்சல் பச்சரிசியில் ஒருவர், கூடிய பட்சம் 100 கிலோ அல்லது 10 கிலோ எடை கொண்ட 10 பாக்கெட் அரிசி மட்டுமே வாங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் நெல் தொழில்த்துறை பிரிவின் தலைவர் அஸ்மான் மஹ்மூத் அறிவித்துள்ளார்.
வியாபாரிகள் ஒரே நேரத்தில் 500 முதல் 700 சிப்பு பச்சரிசி வாங்குவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் இந்த புதிய நடைமுறையை அறிமுகம்ப்படுத்தபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஒருவர் தனது தனிப்பட்ட குடும்பத் தேவைக்கு அப்பாற்பட்ட நிலையில் கூடுதலாக பச்சரிசையை வாங்குவதோ அல்லது அதனை பதுக்குவதோ தடுக்கப்படும் என்று அஸ்மான் மஹ்மூத் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


