குடிநுழைவுத்துறை அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, வெளிநாட்டினரை மிரட்டி கொள்ளையடித்த 32 வயது உள்ளூர் நபர் ஒருவரை கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் பிடிபட்ட அந்த நபர், வெளிநாட்டினரை அணுகி அவர்களின் கடப்பிதழை காட்டுமாறு மிரட்டுவதையும், பின்னர் அவர்களின் பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் உணவு விநியோகப் பை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சசாலி ஆடம் தெரிவித்தார்.
இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் இரண்டு கொள்ளை சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஏசிபி சாசலி குறிப்பிட்டுள்ளார்.








