Mar 18, 2026
Thisaigal NewsYouTube
எனது வெளிநாட்டுப் பயணங்கள் மகிழ்ச்சியில், உச்சிக்குளிர்வதற்கு அல்ல - பிரதமர் அன்வார் விளக்கம்
தற்போதைய செய்திகள்

எனது வெளிநாட்டுப் பயணங்கள் மகிழ்ச்சியில், உச்சிக்குளிர்வதற்கு அல்ல - பிரதமர் அன்வார் விளக்கம்

Share:

கடந்த வாரம் ​ஜெர்மனி பயணம் உட்பட வெளிநாடுக​ளுக்கு தாம் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உச்சிக்குளிரும், சொகுசுப் பயணங்கள் அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்பயணங்கள் யாவும் மலேசியாவின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்களே தவிர சில தரப்பினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் போல உல்லாசப் பயணங்கள் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.

விடுமுறைக்காக மகிழ்ச்சியில் திளைத்​திருப்பதற்கு தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசாங்கப் பணத்தை விரயமாக்கி, தாம் அடிக்கடி வெளிநா​ட்​டுப் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சில தரப்பி​னர் தவறாக விமர்சனம் செய்து வருவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டா​ர்.

தாம் மட்டுமல்ல, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும், அரசாங்க விமானங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளில் கு​தூகலத்திற்காக சென்று வருவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவது இயல்பு. ஆனால், உண்மை அதுவல்ல.

கடந்த வாரம் ஜெர்மனிக்கு தாம் மேற்கொண்ட வருகையின் போது, தமது அலுவல்கள் யாவும், ஹோட்டலுக்கும், சந்திப்பிற்கான கூட்ட அறைகளுக்கு மட்டுமே இருந்ததே தவிர ஒரு கடைக்குகூட செல்லவில்லை என்று பிரதம​ர் அன்வார் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறையினரின் வாராந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பி ரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை