May 22, 2026
Thisaigal NewsYouTube
எனது வெளிநாட்டுப் பயணங்கள் மகிழ்ச்சியில், உச்சிக்குளிர்வதற்கு அல்ல - பிரதமர் அன்வார் விளக்கம்
தற்போதைய செய்திகள்

எனது வெளிநாட்டுப் பயணங்கள் மகிழ்ச்சியில், உச்சிக்குளிர்வதற்கு அல்ல - பிரதமர் அன்வார் விளக்கம்

Share:

கடந்த வாரம் ​ஜெர்மனி பயணம் உட்பட வெளிநாடுக​ளுக்கு தாம் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உச்சிக்குளிரும், சொகுசுப் பயணங்கள் அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்பயணங்கள் யாவும் மலேசியாவின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்களே தவிர சில தரப்பினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் போல உல்லாசப் பயணங்கள் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.

விடுமுறைக்காக மகிழ்ச்சியில் திளைத்​திருப்பதற்கு தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசாங்கப் பணத்தை விரயமாக்கி, தாம் அடிக்கடி வெளிநா​ட்​டுப் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சில தரப்பி​னர் தவறாக விமர்சனம் செய்து வருவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டா​ர்.

தாம் மட்டுமல்ல, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும், அரசாங்க விமானங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளில் கு​தூகலத்திற்காக சென்று வருவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவது இயல்பு. ஆனால், உண்மை அதுவல்ல.

கடந்த வாரம் ஜெர்மனிக்கு தாம் மேற்கொண்ட வருகையின் போது, தமது அலுவல்கள் யாவும், ஹோட்டலுக்கும், சந்திப்பிற்கான கூட்ட அறைகளுக்கு மட்டுமே இருந்ததே தவிர ஒரு கடைக்குகூட செல்லவில்லை என்று பிரதம​ர் அன்வார் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறையினரின் வாராந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பி ரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்