May 22, 2026
Thisaigal NewsYouTube
சிறையில் நஜிப்-க்கு எவ்வித சிறப்பு உபசரணை அளிக்கப்படவில்லை!
தற்போதைய செய்திகள்

சிறையில் நஜிப்-க்கு எவ்வித சிறப்பு உபசரணை அளிக்கப்படவில்லை!

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 29-

சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் உட்பட எந்தவொரு நபர்களுக்கும் சிறையில் சிறப்பு உபசரணைகள் வழங்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்பவே, அனைத்து கைதிகளும் உபசரிக்கப்படுவதாக, மலேசிய சிறைத்துறை தலைமை இயக்குநர் டத்தோ நோர்டின் முஹம்மது கூறினார்.

தற்போது, காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டத்தோ ஸ்ரீ நஜிப் உட்பட அனைத்து கைதிகளும் 1995 சிறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைதிகளுக்கு சிறப்பு உபசரணையை சிறை அதிகாரிகள் வழங்கினால், அது விதிமுறையை மீறும் செயல். அத்தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என டத்தோ நோர்டின் முஹம்மது குறிப்பிட்டார்.

அண்மையில்,காஜாங் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள பேச்சாளர் வான் ஜீ வான் ஹஸ்ஸின், சிறையில் டத்தோ ஸ்ரீ நஜிப்-புக்கு சிறப்பு உபசரணைகள் வழங்கப்படுவதாகவும் இதர கைதிகளைப் போன்று, அவர் சிறை ஆடைகளை அணிவதில்லை எனவும் கூறியிருந்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு