Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிறையில் நஜிப்-க்கு எவ்வித சிறப்பு உபசரணை அளிக்கப்படவில்லை!
தற்போதைய செய்திகள்

சிறையில் நஜிப்-க்கு எவ்வித சிறப்பு உபசரணை அளிக்கப்படவில்லை!

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 29-

சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் உட்பட எந்தவொரு நபர்களுக்கும் சிறையில் சிறப்பு உபசரணைகள் வழங்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்பவே, அனைத்து கைதிகளும் உபசரிக்கப்படுவதாக, மலேசிய சிறைத்துறை தலைமை இயக்குநர் டத்தோ நோர்டின் முஹம்மது கூறினார்.

தற்போது, காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டத்தோ ஸ்ரீ நஜிப் உட்பட அனைத்து கைதிகளும் 1995 சிறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைதிகளுக்கு சிறப்பு உபசரணையை சிறை அதிகாரிகள் வழங்கினால், அது விதிமுறையை மீறும் செயல். அத்தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என டத்தோ நோர்டின் முஹம்மது குறிப்பிட்டார்.

அண்மையில்,காஜாங் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள பேச்சாளர் வான் ஜீ வான் ஹஸ்ஸின், சிறையில் டத்தோ ஸ்ரீ நஜிப்-புக்கு சிறப்பு உபசரணைகள் வழங்கப்படுவதாகவும் இதர கைதிகளைப் போன்று, அவர் சிறை ஆடைகளை அணிவதில்லை எனவும் கூறியிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்