செயற்கை நுண்ணறிவான ஏஐ மற்றும் அதிவேகத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கோலா கங்சார் அரச கல்லூரி போன்ற நாட்டின் பாரம்பரியப் பள்ளிகள் தங்களது கல்வி முறையில் புதிய மறுவடிவமைப்பை மேற்கொள்ள வேண்டும் எனப் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா வலியுறுத்தியுள்ளார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 'Breaking, But Not Broken' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சுல்தான் நஷ்ரின் ஷா, இன்றைய பட்டதாரிகளிடம் மொழி ஆளுமையும் விமர்சன சிந்தனையும் குறைந்து வருவதாகச் சுட்டிக் காட்டினார். வெறும் பொருளாதாரத் தேவைகளுக்கான மனித வளத்தை மட்டும் உருவாக்காமல், நற்பண்புகள், சமூக சிறப்புகள் மற்றும் தனித் திறன்கள் நிறைந்த ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க கல்வி முறை மாற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








