Jul 6, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் தொலைக்காட்சி பிரபலத்திற்கு 4,800 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

முன்னாள் தொலைக்காட்சி பிரபலத்திற்கு 4,800 ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.10-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோலாலம்பூர், தாமான் யு தாண்ட்டில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நுழைவாயில் தடுப்புச் சட்டம் மற்றும் ரகசிய கேமராவை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி, நாசவேலை புரிந்த குற்றத்திற்காக முன்னாள் தொலைக்காட்சி பிரபலமான பெண்மணி ஒருவருக்கு 4 ஆயிரத்து 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து, விசாரணை கோரி வந்த 45 வயது நோர்ஜுமா ஹபிப் முகமட் என்ற அந்த பிரபலம், இன்று குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிப்பதாக மாஜிஸ்திரேட் ஃபாரா நபிஹா முகமட் டான் தீர்ப்பு அளித்தார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 5 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக ஃபாரா நபிஹா தெரிவித்தார்.

Related News