இன்று மதியம் 12.15 மணியளவில் பாலிங், தவார், ஜாலான் ஜெராட் என்ற இடத்தில் புரோட்டான் வீரா ரக காரில் நபர் ஒருவரின் சடலத்தை தீயணைப்பு, மீட்புப்படையினர் மீட்டனர்.
பூட்டப்பட்டு இருந்த காருக்குள் ஒருவர் இறந்த கிடப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு வந்த அவசர அழைப்பு தொடர்ந்து அவ்விடத்திற்கு வீரர்கள் விரைந்தனர்.
காரின் முன்பக்கப் பயணியர் இருக்கையில் இருந்த அந்த நபர் இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையப் படையினர், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரின் கண்ணாடிப் பகுதியைத் திறந்து சடலத்தை வெளியே எடுத்தனர் என்று அதன் உதவி ஆணையர் சுல்கைரி மாட் தான்ஜில் தெரிவித்தார்.








