Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் ஆடவர் கைது விவகாரம், மேலும் நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் ஆடவர் கைது விவகாரம், மேலும் நால்வர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 04-

கடந்த மார்ச் 27 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் 38 வயதுடைய இஸ்ரேலிய ஆடவர் ஒருவர் பிடிபட்டது தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் போலீசார் மேற்கொண்டு வரும் துரித விசாரணையின் பலனாக மேலும் நால்வர் பிடிபட்டுள்ளனர் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

ஆகக்கடைசியாக பிடிபட்ட மேலும் நால்வரில் மூவர் ஆண்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் அவர் தெரிவித்தார். 28 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரும் ஜோகூரில் ஸ்கூடாய் மற்றும் கெலாங் பாத்தாஹ் போன்ற பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

Related News