Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தொடர்புத்துறை அமைச்சு காரணம் அல்ல
தற்போதைய செய்திகள்

தொடர்புத்துறை அமைச்சு காரணம் அல்ல

Share:

உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு தரவரிசையில் மலேசியா 34 இடங்கள் சரிந்து, 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு தமது தலைமையிலான தொடர்புத்துறை அமைச்சு காரணம் அல்ல என்று அதன் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் விளக்கம் அளித்துள்ளார்.

சில விவகாரங்களில் வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் உள்ள சட்டங்கள் மற்றும் மலேசியாவின் நிலைப்பாடு ஆகியவை இந்த பின்னடைவு நிலைக்கு ஒரு காரணமாகம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

உதாரணத்திற்கு திருநங்கை, திருநம்பி முதலியோர் விவகாரங்களில் மலேசியாவின் நிலைப்பாடு என்ன என்பது நன்கு தெரியும். இதேபோன்று ஆசியான் மற்றும் கிழக்கித்திய நாடுகளின் சில விவகாரங்களில் மலேசியாவின் நிலைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கூறினார்.

ஆர்.எஸ்.ஃப் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் என்ற அனைத்துலக ஊடக கண்காணிப்பு அமைப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டதில் கடந்த ஆண்டு 73 ஆவது இடத்தில் இருந்த மலேசியா 34 இடங்கள் சரிந்து 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்திருப்பது தொடர்பில் ஃபாமி ஃபட்சில் எதிர்வினையாற்றினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து