சுபாங்ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு தொடர்பான முழு அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா? என்று தேசிய தினத்துக்குப் பிறகு சிலாங்கூர் அரசாங்கம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், நடப்பு ஆண்டின் கடைசி காலாண்டு வரை காத்திருக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அதற்குள் முடிவு எதுவும் எடுக்கப்படாவிட்டால், அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட முடியுமா என்பது குறித்து மாநில சட்ட ஆலோசகருடன் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பில் பல வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்ததுடன், பெரும் அழிவும் ஏற்பட்டது.








