அரச குடும்பத்திற்கு ஏற்ற மரியாதையுடன் நடந்து கொள்ளவில்லை என்ற காரணத்தால், தனது மருமகள் ராபியாதுல் அடாவியா -வின் அரச குடும்பப் பட்டங்களை புருனை சுல்தான் ஹசனல் போல்கியா பறித்துள்ளார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்பட்ட அரச உத்தரவின்படி, தனது மருமகளுக்கு வழங்கப்பட்டிருந்த யாங் அமாத் மூலியா பெங்கீரான் ஆனாக் இஸ்தேரி என்ற பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
ராபியாதுல், சுல்தானின் மகனான இளவரசர் அப்துல் மாலிக்கின் மனைவியாவார். இருவரும் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
அரச குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது நடத்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் செய்ததாகக் கூறப்படும் குறிப்பிட்ட நடவடிக்கை குறித்து அரண்மனை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.








