கடந்த மாதம் சிம்பாங் அம்பாட்டில் 38 வயது ஆடவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போலீசார் முக்கிய தடயங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன், பலரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் கூறுகையில், விசாரணையில் இதுவரை உறுதியான காரணமோ ஆதாரமோ கிடைக்கவில்லை என்றும், போலீசார் விசாரணையை முடிக்க பொதுமக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஜூலை 27ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில், ஜாலான் பெர்நியாகாஹான் செரி தம்பூன் - னில் உள்ள கடைத்தொகுதி முன்பு அந்த ஆடவர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார்.
அவர் அருகிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று பயிற்சியை முடித்த பின்னர், முட்டைகள் வாங்குவதற்காக அங்குள்ள கடைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
விசாரணைக்காக சிலர் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸ் தெளிவுபடுத்தியுள்ளது.








