கெந்திங் ஹைலண்ட்ஸ் வணிக வளாகத்தில் தங்க நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நண்பகல் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படுவதாக பகாங் மாநில போலீஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல்களை போலீசார் திரட்டி வருவதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் பதில் பகாங் போலீஸ் தலைவர் அஸ்ரி அக்மார் அயோப் கூறினார்.
கொள்ளைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.
ஒரு காணொளியில் கறுப்பு உடை அணிந்த இருவர் பெரிய சாக்குப் பைகளுடன் வணிக வளாகத்துக்குள் ஓடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, கொள்ளையைத் தொடர்ந்து கெந்திங் பகுதியில் தற்காலிக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








