Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மூன்று கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார்

Share:

கெடா, மார்ச் 19

கார் ஒன்றை மடக்கி, கொள்ளையிடும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களில் ஒருவன், சம்பந்தப்பட்ட காரினால் மோதப்பட்டு உயிரிழந்தான். .

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.39 மணியளவில் குவாலா கெடா வில் மருந்தகம் ஒன்றின் முன்புறம் நிகழ்ந்தது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன், காரை மடக்கி, காரின் முன் கண்ணாடியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான். .

கொள்ளையனை கண்ட அதிர்ச்சியில் தப்பிக்க முற்பட்ட ஆடவர், தனது காரை திடீரென்று வேகமாக செலுத்தியுள்ளார். அப்போது அக்கார், கொள்ளையனை மோதி தள்ளியதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அகமாட் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.

தலையில் கடும் காயங்களுக்கு ஆளான 29 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அகமட் சுக்ரி குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை