May 22, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தல் வருகின்ற மே 11
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தல் வருகின்ற மே 11

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 04-

சிலாங்கூர் மாநிலத்தின் கோல குபு பாரு தொகுதியின் இடைத் தேர்தல் வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 27 ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பு மே 7 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் காணி சல்லெஹ் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரான 58 வயது லீ கீ ஹியோங் புற்றுநோயின் காரணமாக மார்ச் 21 ஆம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இது ஏழாவது இடைத்தேர்தலாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வாக்குச்சாவடி மையங்களை உள்ளடக்கிய 74 சேனல்கள் அமைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில் இரண்டு வாக்குப்பதிவு மையங்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் செயல்முறைக்கு தயார்ப்படுத்தப்பட்டிருக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு