Mar 27, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாவது மாடியிலிருந்து கார் விழுந்தது: கார் கழுவும் பணியாளர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

மூன்றாவது மாடியிலிருந்து கார் விழுந்தது: கார் கழுவும் பணியாளர் படுகாயம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.16-

கார் ஒன்று, கட்டடத்தின் மூன்றாவது மாடியில் சுவரில் மோதி கீழே விழுந்ததில் கார் கழுவும் பணியாளர் ஒருவர் படுகாயத்திற்கு ஆளானார்.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 5.38 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் விசாரணைப் பிரிவின் தலைவர் ஏசிபி ஸம்ஸூரி இசா தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தக் காரைச் செலுத்திய ஆப்கானிஸ்தான் பிரஜையான 23 வயது நபர் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.

தனது வாடிக்கையாளருக்குச் சொந்தமான டொயோட்டா கெம்ரி காரைச் செலுத்திய போது, அவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை