Mar 20, 2026
Thisaigal NewsYouTube
5 முக்கிய அம்சங்களை முன்நிறுத்தி பாங் சோக் தாவ்  பிரச்சாரம்
தற்போதைய செய்திகள்

5 முக்கிய அம்சங்களை முன்நிறுத்தி பாங் சோக் தாவ் பிரச்சாரம்

Share:

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் பாங் சோக் தாவ், தொகுதி மக்கள் நலன் சார்ந்த 5 அம்ச விவகாரங்களை முன்னிறுத்தி முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பட்டதாரியான 31 வயது பாங் சோக் தாவ், தொகுதி மக்களுக்கு நிலையான பொருளாதார வளர்ச்சி, சிறந்த போக்குவரத்து வசதிகள், அதிவேக இணைய சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உயர்த்துதல் மற்றும் மக்கள் நலனில் அதீத அக்கறை செலுத்துவது ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி, தமது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

கோலகுபு பாருவை கடந்த பத்து ஆண்டு காலமாக தற்காத்துக்கொண்டு, சிறந்த சேவையை வழங்கியவர் என்ற பதிவை கொண்டிருந்த டிஏபி-யை சேர்ந்த அதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த லீ கீ ஹியோங் விட்டுச் சென்ற அபரிமித சேவையை தொடரப் போவதாக பாங் சோக் தாவ் உறுதி பூண்டுள்ளார்.

இந்த இடைத் தேர்தல்,மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தலாகும். அதேவேளையில் கோலகுபு பாரு தொகுதி மக்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டுள்ளது.

ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தின் பார்வையும், உதவித் திட்டங்களும், மேம்பாடுகளும் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து, தம்மை வெற்றி பெற செய்யுமாறு தொகுதி வாக்காளர்களை பாங் சோக் தாவ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து