May 22, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பறி கொள்ளையால் சாலையில் சுருண்டு விழுந்த பெண்
தற்போதைய செய்திகள்

வழிப்பறி கொள்ளையால் சாலையில் சுருண்டு விழுந்த பெண்

Share:

கிள்ளான், ஏப்ரல் 19-

சிலாங்கூர், கிள்ளானில் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுருண்டு விழுந்த பெண் காயங்களுக்கு இலக்கானார்.

கடந்த திங்கள்க்கிழமை காலை மணி 8.50 அளவில், 20 வயதுடைய அப்பெண்ணை மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த கொள்ளையன், அவரது கைப்பை பறித்த போது, அச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த சம்பவத்தை உறுதிபடுத்திய கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் சா ஹுங் போங், பாதிக்கப்பட்ட பெண் கிள்ளான் தேங்கு அம்புவான் ரஹிமா சிகிச்சைப் பெற்றதோடு, சம்பவ நாளிலேயே போலிஸ் புகார் அளித்திருப்பதாக கூறினார்.

சம்பவத்தின் போது, அவர் அவரது கைப்பையில் iPhone கைப்பேசி, 114 வெள்ளி ரொக்கம், தனிநபர் ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, கருப்பு நிற யமாஹா Y15 மோட்டார்சைக்கிளில் வந்து கைப்பை திருடி சென்ற கொள்ளையனை அடையாளம் காணும் நடவடிக்கையை போலீஸ் முடுக்கிவிட்டிருப்பதாக, சா ஹுங் போங் குறிப்பிட்டார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி