Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு முத்தியாரா எல்ஆர்டி ரயில் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோருவதா?
தற்போதைய செய்திகள்

பினாங்கு முத்தியாரா எல்ஆர்டி ரயில் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோருவதா?

Share:

கோலாலம்பூர், ஜூன்.11-

பினாங்கு தீவில் போக்குவரத்துச் சேவையில் திருப்புமுனையாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் முத்தியாரா எல்ஆர்டி ரயில் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள பாஸ் கட்சியைச் சேர்ந்த பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஃபாவ்வாஸ் முகமட் ஜானை ஜசெக இளைஞர் பிரிவு சாடியது.

கடந்த திங்கட்கிழமை பேரா, ஜெரிக்கில் நிகழ்ந்த உப்சி பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்துடன் தொடர்புபடுத்தி கோரிக்கை விடுத்துள்ள அந்த பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், இந்தத் துயரச் சம்பவத்தை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது. மாறாக , நடப்பு சூழலை அறிந்து பேச வேண்டும் எனறு ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் கேட்டுக் கொண்டார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் பிள்ளைகளைப் பறி கொடுத்தவர்கள், மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ள இவ்வேளையில் அந்த விபத்துடன் பினாங்கு முத்தியாரா எல்ஆர்டி ரயில் திட்டத்தைத் தொடர்புபடுத்தி பேசுவது ஏற்புடையச் செயல் அல்ல என்று வூ கா லியோங் வலியுறுத்தினார்.

Related News

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு

கல்லறையில் தம்பதி ஒழுங்கீன செயல்: தண்டனையைக் குறைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

கல்லறையில் தம்பதி ஒழுங்கீன செயல்: தண்டனையைக் குறைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

சரவாக்கில் முதலை தாக்கிய 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது

சரவாக்கில் முதலை தாக்கிய 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது

மலாக்காவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை: 7 பேர் கைது – 14 பேர் மீட்கப்பட்டனர்

மலாக்காவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை: 7 பேர் கைது – 14 பேர் மீட்கப்பட்டனர்