Mar 21, 2026
Thisaigal NewsYouTube
நீர் ஆதாரங்களை பாதுகாக்க, அனைத்து மாநிலங்களும் சிறப்பு பிரிவை ஏற்படுத்த SPAN கோரிக்கை
தற்போதைய செய்திகள்

நீர் ஆதாரங்களை பாதுகாக்க, அனைத்து மாநிலங்களும் சிறப்பு பிரிவை ஏற்படுத்த SPAN கோரிக்கை

Share:

புத்ராஜெயா, மே 27-

சுத்திகரிக்கப்பட்ட நீர் மீதான தேவையைக் குறைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை தொடர்ந்து, நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசாங்கங்களும் நீர் ஆதாரங்களைத் தற்காப்பதற்கான சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன் வழி, நீர் தேக்க பகுதிகளை முறையாக கண்காணிப்பதோடு
அவற்றை பாதுகாக்க முடியும் என தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்தார்.

நீர் விவகாரங்கள், மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. அண்மையில், பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ் தலைமையில் நீர் பாதுகாப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதை, இதர மாநில அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும்.

நடப்பில், மாநில அரசாங்கங்களின் கீழ் உள்ள நீர் விநியோக நிறுவனங்கள், நீர் சேமிப்பு பரப்புரைகளை மேற்கொள்வதோடு புதிதாக நீர் ஆதாரங்களை தேடி வருகின்றன. அதனால், நீரைப் பாதுகாக்கும் அந்த பரப்புரை சீர்குலைந்துள்ளது.

தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக, நீர் வளம் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருவதால், அனைத்து தரப்பினரும் அதனை உணர்ந்து செயல்பட வேண்டுமென சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து