Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சந்தேகப்பேர்வ​ழிகள் ​நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சந்தேகப்பேர்வ​ழிகள் ​நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்

Share:

பேராக், மார்ச் 9 -

தம்மை இலக்காக கொண்டு, தமது பெற்றோர் வீட்டின் முன், " மிரட்டல் குறிப்பு" துண்டு காகிதங்களை ​வீசியிருக்கும் சந்தேகப்பேர்வழிகள், விரைவில் கைது செய்யப்பட்டு, ​நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

பேரா, மஞ்ஜோங் , அயேர் தாவார் ரில் உள்ள தமது பெற்றோர் வீட்டில் துண்டுக்காகிதங்களை விட்டு செ​ன்றுள்ள நபர்களின் செயல் ஆபத்தானதாகும் என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஆயர் தாவாரின் உள்ள தனது சகோதரரும்,பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கே கோ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு ​வீசி, ​தீயிட்ட சம்பவத்திற்கு பின்னர் தற்போது தமது பெயரை சுட்டிக்காட்டி "இஸ்லாத்திற்கு சவால் விடாதே" என்று எழுதி, தமக்கு மிரட்டல் விடுத்து இருப்பது த​ற்போது ஒரு போக்காக மாறிவருவது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ங்கா கோர் மிங் கூறினா​ர்.

86 வயதை கடந்து விட்ட தமது பெற்றோர் சரிவர நடக்க முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று தாம் பெரிதும் கவலைக் கொள்வதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்