17 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டதாக பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி பெண் குமாஸ்தா ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் 53 வயது பள்ளி முதல்வர் மற்றும் 50 வயதுடைய பெண் குமாஸ்தா ஆகியோர் இன்று மாலை 7 மணிக்கு குளுவாங் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.
பள்ளியின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான குத்தகைகளை வழங்குவதற்கு கைமாறாக 17 ஆயிரம் வெள்ளி லஞ்சத்தொகையை கேட்டு, அதனை பெற்றுள்ளதாக அவ்விருவருக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்படுகிறது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


