Mar 18, 2026
Thisaigal NewsYouTube
18 மாதக் குழந்தையை தாயார் கொலை
தற்போதைய செய்திகள்

18 மாதக் குழந்தையை தாயார் கொலை

Share:

ஜோகூர், மார்ச் 17 -

ஜோகுர்,பாசிர் கூடாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 18 மாதக் ஆண் குழந்தையை, மனிதாபிமானமின்றி அக்குழந்தையின் தாயார் கழுத்தை அறுத்து கொன்றதாக தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 32 வயதுடைய அப்பெண், இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த அக்குழந்தையை புகைப்படம் எடுத்து தனது கணவருக்கு புலனத்தில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக Johor போலீஸ் தலைவர் கொமிசியோனர் ன்.குமார் தெரிவித்தார்.

இதில் அக்குழந்தையின் கழுத்தை அறுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தியும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டதாக ஓர் அறிக்கையில் இன்று ம்.குமார்ச் அறிவித்தார்.

அக்குழந்தையின் உடல் சவப் பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கொலை செய்த குற்றத்திற்காக இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கொலை புரிந்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ம்.குமார் தெளிவுபடுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை