Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மலேசியர்கள் உட்பட 9 பேர் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு மலேசியர்கள் உட்பட 9 பேர் கைது

Share:

தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது போலீசார் மோசடி கும்பலை முறியடித்து இரண்டு மலேசியர்கள் உட்பட ஒன்பது சந்தேகிக்கும் நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் 50 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை முதலீடு திட்டத்தில் ஈர்த்ததுடன் அவர்களிடமிருந்து 105.26 மில்லியனை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மோசடி கும்பலில் மூளையாக செயல்பட்டு வந்த 42 வயதுடைய மலேசிய பிரஜை ஒருவர் கடந்த மார்ச் 6 ஆம் தேதி Songkhla, Sadao - வில் கைது செய்யப்பட்டதாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவின் தலைவர் Puttidej Bunkrapue அறிவித்தார்.

மற்றொரு நபராக, மலேசியாவில் முன்னதாகவே குற்றப் பதிவுகள் கொண்டிருந்த 26 வயதுடைய ஆடவன் ஒருவன் தனது 30 வயது தாய்லாந்து காதலியுடன் கைது செய்யப்பட்டதாக Puttidej விவரித்தார்.

கைது செய்யப்பட்ட மலேசிய பிரஜை உட்பட தாய்லாந்து பெண்மனியும் கம்போடியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் மோசடி செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் சந்தேகிக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்கு மலேசிய காவல்துறையின் ஒத்துழைப்பை கோருவதாக Puttidej விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்