தங்களை சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு மலேசியாவிற்கு எதிராக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கில் மலேசியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் என்று சட்டத்துறை அமைச்சர் அஸாலீனா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் மலேசியாவிற்கு சாதகமாக இருப்பதாக அஸாலினா குறிப்பிட்டார். எட்டு வாரிசுதாரர்கள் தொடுத்துள்ள இவ்வழக்கு தொடர்பில் மலேசிய சட்டத்துறை அலுவலகம் சார்பில் ஆஜராகியுள்ள டத்தோ அல்மாலீனா ஷர்மலா ஜொஹான், ஸ்பெயினுக்கான மலோசியத் தூதர் டத்தோ அக்மால் சே முஸ்தியாஃபா ஆகியோருடன் அண்மையில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டிற்கு தாம் வருகை மேற்கொண்ட போது வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கான நம்பிக்கை ஒளி தெரிந்ததாக அஸாலினா தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


