தங்களை சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு மலேசியாவிற்கு எதிராக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கில் மலேசியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் என்று சட்டத்துறை அமைச்சர் அஸாலீனா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் மலேசியாவிற்கு சாதகமாக இருப்பதாக அஸாலினா குறிப்பிட்டார். எட்டு வாரிசுதாரர்கள் தொடுத்துள்ள இவ்வழக்கு தொடர்பில் மலேசிய சட்டத்துறை அலுவலகம் சார்பில் ஆஜராகியுள்ள டத்தோ அல்மாலீனா ஷர்மலா ஜொஹான், ஸ்பெயினுக்கான மலோசியத் தூதர் டத்தோ அக்மால் சே முஸ்தியாஃபா ஆகியோருடன் அண்மையில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டிற்கு தாம் வருகை மேற்கொண்ட போது வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கான நம்பிக்கை ஒளி தெரிந்ததாக அஸாலினா தெரிவித்தார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!


