Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களிக்காத பாஸ் உறுப்பினர்கள், இஸ்லாம் சமயத்திற்கு முரணானவர்கள்! தகியுதீன் ஹசன் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களிக்காத பாஸ் உறுப்பினர்கள், இஸ்லாம் சமயத்திற்கு முரணானவர்கள்! தகியுதீன் ஹசன் கூறுகிறார்

Share:

இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர், கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாஸ் கட்சியின் உறுப்பினர்கள், வாக்களிக்கவில்லை என்றால், அது இஸ்லாம் சமயத்திற்கு முரணானதாக கருதப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ தகியுதீன் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமது அக்கூற்று, இஸ்லாமிய சட்டம் இல்லை. இருந்த போதிலும், வரக்கூடிய இடைத்தேர்தலில் தகுதி பெற்ற பாஸ் கட்சியின் வாக்காளர்கள், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் கைருல் அசாரி சாவுட்டிற்கு வாக்களிப்பதற்கான உத்தரவாக அதனை தாம் வழங்குவதாக தகியுதீன் ஹசன் கூறினார்.

தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது பாஸ் கட்சியின் அரசியலைமைப்பில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு மதிப்பளிக்கும் வகையில், வருகின்ற இடைத்தேர்தலில், தங்களது குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள் முதலானோர் கைருல் அசாரி சாவுட்டிற்கு வாக்களிப்பதை, பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாரவர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து