தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யலாம் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
தீபகற்ப மலேசியாவின் வடகிழக்கு கடலோரப்பகுதிகளிலும்,கிழக்கு மலேசியாவான சபா,சரவாவில் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மெட்மலேசியா இன்றிரவு அறிவித்துள்ளது.








