Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மரணம்
தற்போதைய செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மரணம்

Share:

இன்று காலை, கிள்ளான் துறைமுகத்திலுள்ள Kampung Telok Gong கில் அமைந்திருக்கும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது, treler ஒன்று மோதியதில் ஒன்பது வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவி, 54 வயதுடைய தனது காப்பாளருடனும், ஏழு வயதுடைய சிறுவனுடனும் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுற்குச் செல்லும் வழியில், treler மோதி மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் Morni Mamat தெரிவித்தார்.


அந்த காப்பாளரும், சிறுவனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அப்பள்ளி மாணவி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அம்மாணவியின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய மற்ற இரு நபரும், சிகிச்சைக்காக கிள்ளான் , Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு