தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு தலா 500 வெள்ளி அபராதத்தை விதிப்பதற்கு சுகாதார அமைச்சு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார். எனினும் இந்த அபாரதத் தொகையை உயர்த்தும் திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக டாக்டர் சலிஹா குறிப்பிட்டார்.
அதேவேளையில் பொது இடங்களில் ஏன் புகைப்பிடிக்கக்கூடாது என்பதற்கு சரியான விளக்கங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்குவார்களேயானால் அவை குறித்து பரிசீலனை செய்ய சுகாதார அமைச்சு தயார் என்று டாக்டர் சலிஹா தெரிவித்தார்.







