Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கோலா குபு பஹாரு இடைத்தேர்தலில், மலாய் வேட்பாளரே பக்காத்தான் ஹரப்பான்-னுக்கு வெற்றியை வழங்குவார்!
தற்போதைய செய்திகள்

கோலா குபு பஹாரு இடைத்தேர்தலில், மலாய் வேட்பாளரே பக்காத்தான் ஹரப்பான்-னுக்கு வெற்றியை வழங்குவார்!

Share:

கோலா குபு பஹாரு, ஏப்ரல் 01 -

கோலா குபு பஹாரு-வில் மலாய் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளதால், வரக்கூடிய இடைத்தேர்தலில் மலாய் வேட்பாளரை பக்காத்தான் ஹரப்பான் களமிறக்கினால் அக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக, மலாயாப் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் அவாங் அஸ்மான் பாவி தெரிவித்தார்.

மலாய் வேட்பாளரை முன்னிறுத்துவதன் வழி, கடந்த சிலாங்கூர் சட்டமன்ற தேர்தலில், பக்காத்தான் ஹரப்பான்-னுக்கு வாக்களிக்காத UMNO ஆதரவாளர்களை அக்கூட்டணி கவர்ந்திழுக்க முடியும். அத்துடன், அக்கூட்டணியின் அடிப்படை ஆதரவாளர்களான மலாய் அல்லாதவர்கள் வாக்களிக்க வெளியில் வராமல் போகும் சாத்தியத்தை சரிசமப்படுத்தமுடியும்.

மலாய்க்காரர்களின் ஆதரவை அதிகம் கொண்டுள்ள பேரிக்காதான் நசியனால் கடந்த தேர்தல்களில் ஹுலு சிலாங்கூர்-ரையும் அதன் கீழ் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய அவாங் அஸ்மான் பாவி, தமது அந்த பரிந்துரை விவேகமான ஒன்று எனவும் கூறினார்.

கோலா குபு பஹாரு-வில் மலாய்க்காரர்கள் 46 விழுக்காடு, சீனர்கள் 30 விழுக்காடு, இந்தியர்கள் 18 விழுக்காடாக உள்ள வேளை, எஞ்சியவர்கள் 5 விழுக்காடாக உள்ளனர்.

கடந்த 3 தவணைத் தேர்தல்களில் அந்த தொகுதியை வென்று வந்த டிஏபி-யைச் சேர்ந்த லீ கீ ஹியோங் கடந்த மாதம் 21ஆம் தேதி புற்றுநோயால் இறந்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்