Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் திட்டம் இல்லை  நிதி அமைச்சு திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் திட்டம் இல்லை நிதி அமைச்சு திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடியின் போது மலேசியா மேற்கொண்டதை போல ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் திட்டத்தை அரசாங்கம் தற்போது கொண்டிருக்கவிலை என்று இரண்டாவது நிதியமைச்சர் அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் போது நாட்டின் அன்றைய பொருளாதார நிலை, தற்போது இருப்பதுபோல இல்லை என்று அமிர் ஹம்சா விளக்கினார்.

அன்றைய பொருளாதார சூழ்நிலைக்கும், இன்றைய பொருளியல் வளர்ச்சிக்கும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருப்பதால் அன்றைய நாளில் கையாளப்பட்ட யுக்தியை மலேசியா மீண்டும் பின்பற்ற இயலாது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

உதாரணத்திற்கு, கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதார நிலையில் பங்கு சந்தை 76 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. ஆனால், இவ்வாண்டு முற்பகுதியில் பங்கு சந்தை 6 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.

தவிர, 1998 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் நாட்டின் மொத்த உற்பக்தி விகிதத்தில் 16 விழுக்காடாக இருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு கடன் நாட்டின் மொத்த உற்பக்தியில் 2 அல்லது ஒரு விழுக்காடு மட்டுமே இருப்பதாக அமிர் ஹம்சா சுட்டிக் காட்டினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை